திருப்பாவை பாசுரத்தால் மழை - யாகம்
நந்தவன காற்று பகுதி - 9
வேதத்தின் சாரமே திருப்பாவை ! ஆண்டாள் தன் தோழிகளை ஆயர்பாடியாகவும், தான் பிறந்த நந்தவனத்தை கோகுலமாகவும் கருதினாள். ! அதன் மூலமே திருப்பாவை ஆகும். ஓருவருக்கு ஸ்ரீ கண்ணபிரான் மீது நம்பிக்கையும், அதன் பயனாக, ஆத்ம பலமும் கிட்டும். ஓருவருக்கு ஆத்ம பலம் கிடைத்து விட்டால் எல்லாம் கிட்டும்.
யாகத்தைப் பற்றி ; -
ஆழிமழைக் கண்ணா, வங்கக்கடல் கடைந்த பாடலை பாடினால் மழை நிச்சயம் அப் பகுதியில் பெய்யும்.
திருப்பாவையின் எல்லா பாடல்களையும் பாடினால் , எல்லா யாகமும் செய்த பலன் கிடைக்கும்.
நமக்குரிய பலன் வேண்டி நாம் பாராயணம் செய்தால், அதற்கான பலன் ஆண்டாளின் - திருப்பாவை மூலம் கிட்டும்.