விநாயகர் மந்திரம்
Vinayagar Mantra
ஶுக்லாம்பரதரம் விஷ்ணும், ஶஶிவர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத், ஸர்வ - விக்னோப ஶாந்தயே ! || 1
வக்ரதுண்ட மஹாகாய, ஸுர்யகோடி ஸமப்ரபா !
நிர்விக்நம் குருமே தேவ, ஸர்வகார்யேஷு ஸர்வதா ! || 2
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே !
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா. ! || 3
மூஷிகவாகன மோதக ஹஸ்த !
சாமர கர்ண விளம்பித சூத்ர !
வாமனரூப மகேஷ்வர புத்ர !
விக்ன விநாயக பாத நமஸ்தே. ! || 4
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் !
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் !
உமா ஸுதம் சோக வினாச காரணம் !
நமாமி விக்னேச்வர பாத பங்கஜம் ! || 5
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ர துண்டாய தீமஹி !
தந்தோ தந்தி: ப்ரசோதயாத்.! || 6
ஐந்து கரத்தனை யானை முகத்தனை !
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றினை !
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை !
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. ! || 7
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் !
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு !!
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் !
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு !! || 8
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த !
தொல்லைபோம் போகாத் துயரம்போம் !
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் !
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால் !! || 9
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் !
விநாயகனே வேட்கை தணிவிப்பான் ! விநாயகனே !
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் !
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து. !! || 10
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை !
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய் !
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச் !
சங்கத் தமிழ்மூன்றும் தா. !! || 11
🔅🔅🔅🔅🔅
இவ்வாறாக நமது செட்டி நாட்டு பகுதியில் பக்தர்கள் கணபதியை, தினந்தோறும் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் கொண்டாடுவது வழக்கம்.